Wednesday, 23 July 2008

❒ பாவனா கவுஜ/வஜனப் போட்டி

இந்தப் படத்தை பற்றி சின்னதா கவுஜ அல்லது வஜனம் அதாங்க டைலாக்கு எதுனாச்சும் எடுத்து உடுங்க...பெஸ்ட் வஜனத்துக்கு ஒரு பரிசு உண்டு.

Image and video hosting by TinyPic

இது எந்தப் படத்தில் இடம் பெறும் காட்சி?
என்ன பாடல்?

இது உப கேள்வி ;)

Monday, 17 September 2007

❒ நேற்றுப் பார்த்த பெரியார்!

கலைஞர் டிவியில் நேற்று கண்ட பெரியார் திரைப்படம் முந்தின நாள் கண்ட இரண்டு தமிழ் மசாலாத் திரைப்படங்களுக்கு நேர் எதிரிடையாக இருந்தது. பெரியார் பிறந்த நாளுக்கு முந்தைய நாளே படத்தை கலைஞர் டிவி ஒளிபரப்பி விட்டது.

நல்ல முயற்சி. பெரியாரின் வாழ்வை ஒட்டிய நிகழ்வுகளை நன்றாகத் தொகுத்திருக்கிறார்கள்.

பார்த்ததில் என்னை கவர்ந்தது பெரியாராக நடித்த சத்தியராஜின் இயல்பான நடிப்பு. பெரியாரின் துணைவிகள் நாகம்மை, மணியம்மையாக வரும் ஜோதிர்மயி, குஷ்பு ஒளரவு இயல்பாக நடித்துள்ளனர். மற்றவர்கள் இயல்பாக நடிக்க முயன்று? தோற்றுப் போயிருக்கிறார்கள். காமராஜ் பரவாயில்லை. பிற திராவிடத் தலைவர்களாக நடித்தவர்கள் கொஞ்சம் பயத்துடனே நடித்த மாதிரி தெரிகிறது. அதிகமாக நடுங்கியவர் கருணாநிதியாக நடித்தவர் தான் என்று தோன்றுகிறது.

திரைக்கதையில் எதையும் விட்டு விடக்கூடாது என்ற பதற்றம் தெரிகிறது. அதனால் சில காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. உணர்வுப்பூர்வமாக அமைய வேண்டிய பல காட்சிகள் மிகவும் சாதாரணமாக எடுக்கப் பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் கொஞ்சம் துண்டு துண்டாக நிகழ்ச்சிகள் வருகின்றன. பெரியாரைப் புரிந்து கொள்ளச் செய்வது என்ற அளவில் அது சரியான அணுகுமுறைதான். ஆனால் படத்தின் நனவோட்டத்தை அது சற்றே பாதிக்கிறது.

படத்தில் இயக்குநரின் உழைப்புத் தெரிகிறது. ஆனால் சினிமா என்ற மாபெரும் ஊடகத்துக்கான களம் அமைப்பதில் கொஞ்சம் சறுக்கல் தான். ஆனால் நல்லதொரு, அவசியமான வரலாற்றுப் பதிவு என்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
*
ஞாயிற்றுக்கிழமை முக்கியமான திரைப்பட நேரத்தில் ஒளிபரப்பப் பட்ட திரைப்படம். ஆனால் எத்தனை பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று பார்த்தால் மிகுந்த ஏமாற்றம். எங்கள் தெருவில் உள்ள எந்தக் குடும்பத்திலும் பெண்கள் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பாமல் சானலை மாற்றி சன்டிவியில் ஓடிய அருணாச்சலத்தை 26 வது முறையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலைமையாக இருந்திருக்கும்....ம்..

-oOo-

பார்த்து விட்டீர்களா? திரட்டிகளின் தொகுப்பு

Saturday, 12 May 2007

❒ பெரியார்: விமர்சனம்

லகில் முதன் முதலில் விண்வெளியில் பறந்த ரஷிய வீரர் யூரிககாரின் கூறியது...

வானில் உயரப் பறந்தபோது பூமியில் இருந்த -மனிதனால் உருவாக்கப்பட்ட -சீனப் பெருஞ்சுவர் மட்டுமே ஒரு சிறு கோடு போல கண்களுக்குத் தெரிந்தது

என்பதுதான். ஆதிக்க நாடுகளின் அழகு மிளிர் வானுயர் கட்டடங்களோ, கோபுரங்களோ, அடிமை தேசங்களின் அவலக் குடிசைகளோ அவர் கண்களுக்குத் தெரியவில்லை. பூமியில் இருந்தபோது புரியாத இந்த உண்மை வானில் உயரப் பறந்தபோதுதான் அவருக்குப் புலப்பட்டது. அது போல தன்னுடைய சமநோக்குப் பார்வையாலும், சீரிய சிந்தனையாலும் உயரப் பறந்த பெரியாரின் பார்வைக்கு ஏழை, பணக்காரன், கீழ் சாதி, மேல் சாதி, பால் பாகுபாடு போன்ற எவையும் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் "மனிதன்' என்பது மட்டும்தான். அப்படிப்பட்ட ஒரு மாமனிதருக்கு மரியாதை செலுத்த விரும்பிய நல்ல மனிதர்களின் முயற்சியே "பெரியார்'.

பெரியாரின் வாலிபம் முதல் வயோதிகம் வரையிலான கால கட்டங்களின் பல அம்சங்களை எளிமையாகவும், தெளிவாகவும் காட்டியிருக்கிறார்கள். பெரியாரைப் பற்றி படித்தும், கேட்டும் அறிந்த இளைய தலைமுறையினருக்கும், அவரைப் பார்த்து, அவர் காலத்தில் வாழ்ந்த பலருக்கும் இந்தப் படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களும், சம்பவங்களும் இருக்கின்றன.

பூஜைக்குத் தடை ஏற்படுத்தி தந்தையிடம் செருப்படி வாங்குவது, காசியில் எச்சில் இலை உண்பது, தாழ்த்தப்பட்டவர் என ஒதுக்கப்பட்டவரின் வீட்டில் சுற்றுப்புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் அன்போடு உணவு உண்ணுவது, பிழைப்புக்காக பக்தர் வேஷமிடுவது, பெண்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத உடையை மலேசியாவிலிருந்து மனைவிக்கு வாங்கி வந்து அதை அணிந்து வரச் சொல்வது, கருத்து வேறுபாடு இருந்தபோதும் ராஜாஜியுடன் நண்பராக அன்பு பாராட்டுவது உள்ளிட்ட பல காட்சிகள் பெரியாரின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.

"அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளைத் தளர்த்தாவிட்டால் ரஷியா சிதறிவிடும்' என்று கூறுவதும், "மதவாதிகளால் உங்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று காந்தியடிகளிடம் கூறும்போதும், விதவை மறுமணக் காட்சிகளும் பெரியாரின் தொலைநோக்குப் பார்வையைத் தெளிவுபடுத்துகின்றன.

படத்துக்குப் பெரிய பலம் கதாபாத்திரத் தேர்வு. பெரியாராக நடித்துள்ள சத்யராஜின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது. பெரியாரின் குரலை ஏற்ற இறக்கத்துடன் உச்சரித்திருப்பதிலும், நடை உடை பாவனையிலும், பல ஆண்டு பிரிவுக்குப் பிறகு அண்ணாவைச் சந்திக்கும் காட்சியிலும் அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெரியாரை நடமாடவிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சத்யராஜ் எந்த விருதையும் இனி எதிர்பார்க்கத் தேவையில்லை; பெரியார் பாத்திரத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பே அவருக்கு உண்மையான, உரிய, உயரிய விருது.

அதே போல் முதல் மனைவி நாகம்மையாக வரும் ஜோதிர்மயி, பிற்காலத் துணைவி மணியம்மையாக வரும் குஷ்பு ஆகியோர் யதார்த்தத்தின் முழு வடிவையும் தங்களுடைய நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தங்களுடைய பாத்திரத்தின் தன்மையையும், பொறுப்பையும் உணர்ந்து கண்ணியமாக நடித்திருக்கிறார்கள். பெரியாரின் தாயாராக நடித்திருக்கும் மனோரமா, எஸ்.எஸ்.ஸ்டேன்லி (அண்ணா), சேலம் ரங்கநாதன் (கருணாநிதி), பாண்டு (எம்.ஜி.ஆர்.), அண்ணாமலை (காமராஜர்) உள்ளிட்ட பலரும் கதையோட்டத்துக்குத் தேவையான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவரிடமும் சிறப்பாக வேலை வாங்கிய இயக்குநர் ஞானராஜசேகரன் பாராட்டுக்குரியவர்.

தங்கர்பச்சானின் ஒளிப்பதிவு... காலமாற்றத்துக்கு ஏற்ப யதார்த்தத்தையும், அழகியலையும் சரிவிகிதத்தில் கலந்து காட்டியிருக்கிறது. வித்யாசாகரின் இசையில் ஜேசுதாஸ் பாடியுள்ள "தாயும் யாரோ...' பாடலில் "தந்தை'க்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார் வைரமுத்து. கலை இயக்குநர் ஜே.கே.யின் உழைப்பும், லெனினின் படத்தொகுப்பும் பல காட்சிகளில் உதவியிருக்கிறது.

பெரியார் என்றால் இப்படித்தான் என பலர் நினைத்திருந்த விஷயங்களைத் தாண்டி, அவருடைய அருங்குணங்களையும், பன்முகத் திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். சமகால அரசியலாளர்களைப் புறக்கணித்து சங்கடத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சில காட்சிகள் இருந்தாலும் பெரிய முயற்சிக்காக படத்தை பாராட்டலாம். அறுதியற்ற முடிவு (ர்ல்ங்ய்ண்ய்ஞ் ங்ய்க்) பாணியிலான படத்தின் இறுதிக் காட்சியில் பெரியார் துக்கத்துடன் பேசும் வசனங்கள், சமூகத்தில் இன்னும் ஏற்பட வேண்டிய பல மாற்றங்களைச் சூசகமாக உணர்த்துகின்றன.

மனிதர்கள் மானமுள்ளவர்களாக வாழ வேண்டும் என வலியுறுத்திய "பெரியார்' ...

தர"மான' படம்!

# தினமணியில் மனோஜ்கிருஷ்ணா.

Sunday, 25 February 2007

❒ சென்னையில் புது திரைப்படக்கல்லூரி


பாலுமகேந்திராவின் புதிய திரைப்படக் கல்லூரி:
செப்டம்பர் முதல் சென்னையில் தொடக்கம்


சென்னை, பிப். 24: பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா சென்னையில் புதிய திரைப்படக் கல்லூரியைத் தொடங்குகிறார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பாலுமகேந்திரா கூறியதாவது:

சினிமா மீது எனக்கு ஏற்பட்ட வெறி காரணமாக நான் தேடித் தேடிச் சேகரித்த அறிவு, பணியாற்றத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த அனுபவம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் திரைப்படக் கல்லூரியைத் துவக்குகிறேன்.

பண லாபம் கருதி இக்கல்லூரியைத் துவக்கவில்லை. தற்போது என்னிடம் போதிய பண வசதி கிடையாது. ஆனாலும் தைரியத்தோடு களமிறங்கியிருக்கிறேன்.

என் நண்பர்களும், உறவினர்களும், சினிமாவை நேசிக்கும் நல்ல உள்ளங்களும், என்னோடு பணியாற்றியவர்களும் எனக்குக் கைகொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இக்கல்லூரி வரும் செப். 7-ம் தேதி முதல் சாலிகிராமத்தில் செயல்படும். இதில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ கோர்ஸ்) 12 மாதங்கள் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு ஆகிய துறைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆகிய துறைகளுக்கு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சியளிக்கப்படும்.

இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய துறைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள 12 இடங்களில் 4 இடங்கள் வெளிநாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இக்கல்லூரியில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்கால இலக்கியமும் ஒரு பாடத்திட்டமாக இருக்கும்.

அனைத்துத் துறைகளிலும் அத்தியாவசிய தொழில்நுடப்க் கோட்பாடுகள், அதிக எண்ணிக்கையிலான செய்முறைப் பயிற்சிகள் இடம்பெறும். ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நானே நேரடியாகக் கற்றுக்கொடுக்கிறேன்.

தேசிய நாடகக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த கலைஞர் கோபாலி நடிப்புத்துறையின் முக்கிய ஆசிரியராக இருப்பார். கே. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக வருகை தந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர் என்றார் பாலுமகேந்திரா.

1966 முதல் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் இருக்கும் பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகள், 8 மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றவர்.

இந்திய மற்றும் சர்வதேச அளவில் திரைப்படத்துறையின் முக்கியமான பல அமைப்புகளுக்கு தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

-oOo-

செய்தி: தினமணி

-oOo-

ஆடின கையும் பாடின வாயும் சும்மா இருக்காது.

Tuesday, 06 February 2007

❒ கனிமொழியின் கோபம்

Image and video hosting by TinyPicசினிமாவை ஒரு தொழிலாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைக்கிறவர் பிரகாஷ்ராஜ். தனித்துவம் கொண்ட நடிப்பால் எப்படி தனியிடம் பெற்றுள்ளாரோ அப்படி தயாரிப்பாளராகவும் தனி முத்திரை பெற்று வருகிறவர். இவர் தனது டூயட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை பல புதிய திறமைசாலிக்கு களமாக்கி வருகிறார்.

டூயட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டு ராதாமோகன் இயக்கியுள்ள "மொழி" படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் அண்மையில் நடந்தது.

மொழி எவ்வளவு இனிமையானதோ இதே இனிமை இன்பத்தை விழா வழங்கியது. தன் தயாரிப்பில் வெளிவரும் இந்தப் பட ஆடியோ விழாவினை துவக்கி வரவேற்புரையாற்றிய பிரகாஷ்ராஜ் தொகுப்புரையாக அவ்வப்போது தன் அனுபவக் கீற்றுகளை வெளிக்காட்டிப் பகிர்ந்து கொண்டார்.

Image and video hosting by TinyPicபிரகாஷ்ராஜ் பேசும் போது, இந்த உலகத்தில் எத்தனை லட்சம், கோடி மொழிகள் இருக்கின்றன தெரியுமா. ஒருவன் எத்தனை மொழி பேசுகிறான் தெரியுமா? சந்தோஷத்தில் ஒரு மொழி துக்கத்தில் ஒருமொழி.. அன்பில் காதலில் ஏக்கத்தில் சிரிப்பில் சிலிர்ப்பில் ஏமாற்றத்தில்.. இப்படி எத்தனை எத்தனை மொழிகள் பேசுகிறான். மொழி வெறும் வார்த்தையல்ல. அர்த்தம். மொழி சத்தமல்ல உள்ளம். இந்த "மொழி" பட அனுபவம் என்னை அழகாக்கியிருக்கிறது. மொழி வெளிப்படுத்துவது மட்டுமல்ல உள்வாங்கிக் கொள்வதும் கூட. ராதாமோகன் வெளிப்படுத்திய மொழியை நான் உள்வாங்கிக் கொண்டதுதான் இந்த "மொழி"!" என்றார் பளிச்சென்று.

கனிமொழி பேசும்போது தன் கவலையை வெளியிட்டார்.

"எனக்கு இதுமாதிரி சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில் விருப்பம் இருப்பதில்லை. காரணம் தமிழ்ச் சினிமாவைப் பார்த்து பார்த்து நொந்துபோன பார்வையாளர்களில் நானும் ஒருத்தி. ஏதாவது நம் சினிமாவில் மாற்றம் வராதா என்று ஏங்கியதுண்டு. "அவள் அப்படித்தானி"ல் பொறி தட்டியது. பிறகு "காதல்" இப்படி எப்போதாவது பொறி தட்டும். இப்போதெல்லாம் படம் பார்க்கவே தயக்கம்.

ஆனால் டூயட் மூவிஸ் படங்களை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. ஏதாவது புதிய முயற்சி இருக்கும். ஒன்றுமேயில்லை என்றால் பிரகாஷ்ராஜின் நடிப்பையாவது பார்த்துவிட்டு வரலாம். "மொழி"யில் ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து சூர்யா மீது கோபம் வந்தது. ஜோதிகா நடிக்கவில்லை என்றால் சினிமாவுக்கு பெரிய இழப்புதான்" என்றார்.

Image and video hosting by TinyPicஅடுத்து "மொழி"யின் ஆடியோவை இயக்குநர் ஷங்கர் வெளியிட இயக்குநர் பிரியதர்ஷன் பெற்றுக் கொண்டார்.

ஷங்கர் பேசும் போது "என் மொழி சினிமாதான். பேச்சல்ல. நல்ல படம் வரணும்னா அது தயாரிப்பாளர் கையில்தான் இருக்கு. பிரகாஷ்ராஜ் ஒரு நல்ல தயாரிப்பாளர்" என்றார் சுருக்கமாக.

இறுதியில் ப்ரியதர்ஷன் பேசும்போது, "ஜோதிகா என் மகள் மாதிரி. நான் அறிமுகப்படுத்திய ஜோதிகா இன்று இந்த அளவுக்கு வளர்ந்து பேசப்படுவது.. மகளைப் பெற்ற தந்தையைப் போல எனக்குப் பெருமையாக உள்ளது" என்றார்.

"மொழி" இசை வெளியீட்டு விழா புதுமொழி பேசியது. "மொழி"யின் தர முத்திரைக்கு முன்னுரை எழுதியது போலவும் இருந்தது.

-oOo-

MSN News

15:45 Posted in சினிமா | Permalink | Comments (1) | Email this | Tags: jothika, kanimozhi, cinema |  del.icio.us | | Digg! Digg

Monday, 15 January 2007

போக்கிரி x ஆழ்வார்

Image and video hosting by TinyPic
திரை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள படங்கள் போக்கிரியும், ஆழ்வாரும்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலயும், இளைய தளபதியும் நேருக்கு நேர் மோதும் படம் என்பதாலும், ஆதி படம் விஜய்யை வாரி விட்டது, வரலாறு மூலம் அஜீத் மீண்டும் வீறு கொண்டு எழுந்திருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம்.

-oOo-

போக்கிரி:
போக்கிரி படத்தை இயக்கியிருப்பவர் பிரபு தேவா. விஜய்யுடன் அதகளம் பண்ணியிருப்பவர் ஆசின். படம் முழுக்க இளமைத் துள்ளளும், அதிரடி ஆக்ஷனும், மின்னல் ஆட்டமும் நிறைந்து விஜய் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து படைக்க காத்திருக்கின்றன.

ஏற்கனவே பாடல்கள் முழுவதும் ஹிட் ஆகி ரசிகர்களை சூடேற்றி சுதியேற்றி வைத்துள்ளன. படத்தைப் பார்க்க விஜய் ரசிகர்கள் படு வேகமாக காத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு பாதியில் ரவுடியாக வருகிறார் விஜய், இன்னொரு பாதியில் போலீஸ் அதிகாரியாக அவதாரம் பூணுகிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்துள்ள முதல் படம் இதுதான். படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம்தான் போக்கிரி. தமிழிலும் கலக்குமா என்பது ரசிகர்கள் கையில் உள்ளது.

-oOo-

ஆழ்வார்:
வரலாறு மூலம் அத்தனை பேருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்த தல அஜீத், ஆழ்வார் மூலம் தனது எழுச்சியை கன்பார்ம் பண்ண வருகிறார். இதில் அவருக்கு ஜோடி ஆசின்.

தொடர்ந்து தோல்விகளையத் தந்து வந்த நிலையில் வரலாறு, அஜீத்துக்கு பெரும் பிரேக் கொடுத்தது. அந்த சூட்டோடு, ஆழ்வார் படமும் வெளியாவதால் தல ரசிகர்கள் தலை கால் புரியாத சந்தோஷத்தில் உள்ளனர்

படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். விநியோகஸ்தர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பாம். அத்தனை ஏரியாக்களிலும் சூப்பர் ரேட்டுக்கு படம் விற்றுள்ளதாம். 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழகத்தைக் கலக்கப் போகிறார் ஆழ்வார்.

-oOo-
செய்தி-தட்ஸ்தமிழ்

15:05 Posted in சினிமா | Permalink | Comments (11) | Email this | Tags: cinema, ajith, vijay |  del.icio.us | | Digg! Digg

Friday, 05 January 2007

நடிகர்களுக்குப் புது வரி

Read & Relax


பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்...படம்: ஆனந்தம்.
பாடல்: உண்ணிகிருஷ்ணன், ஹரிணி.
ஆடல்: அப்பாஸ், சினேகா.


வரும் நிதியாண்டு முதல் டாக்டர், வழக்கறிஞர் நடிகர்களுக்கும் சேவை வரி: மத்திய அரசு

புதுதில்லி, ஜன. 5: சட்டம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் நடிகர், நடிகைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்பட 44 புதிய சேவைகளுக்கு வரும் நிதியாண்டு முதல் வரி விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இச்சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய விற்பனை வரியைக் குறைக்கும் நடவடிக்கையால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

புதிய சேவைகள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும். மத்திய நிதியமைச்சகத்துக்கும் மாநில நிதியமைச்சர்களுக்கும் புதன்கிழமை ஏற்பட்ட உடன்படிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்துக்கும், இழப்பீட்டுத் தொகைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

புதிய சேவைகள் தவிர, தனியார் பாதுகாப்பு, ரியல் எஸ்டேட், உணவக சேவை, சுற்றுலா உள்பட ஏற்கெனவே உள்ள 33 சேவைகள் மீது விதிக்கப்படும் விதியும் முழுமையாக மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது, இந்த வரிகளில் 30.5 சதம் மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புதிய சேவைகள் உள்பட 33 பிரிவுகளில் கிடைக்கும் வரி முழுவதையும் மாநிலங்களுக்கு அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக தில்லி மாநில நிதியமைச்சர் ஏ.கே. வாலியா நிருபர்களிடம் தெரிவித்தார்.

மத்திய விற்பனை வரியை, ஏப்ரல் 1ம் தேதி முதல் நான்கில் இருந்து மூன்று சதவீதமாகக் குறைப்பதால் மாநிலங்களுக்கு ஏற்படும் ரூ. 6250 கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
~~~~~~
தினமணி

08:45 Posted in அரசியல் | Permalink | Comments (4) | Email this | Tags: tax, cinema |  del.icio.us | | Digg! Digg

Tuesday, 02 January 2007

சலுகை ரஜினிக்காகவா?

Image and video hosting by TinyPic

சிறு தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களின் வசதிக்காக சினிமா டிக்கெட் கட்டணங்களை தமிழக அரசு குறைத்தது. ஒரு வார காலத்திலேயே அதை மாற்றி கட்டணத்தை இருமடங்காக உயர்த்திக்கொள்ள வகை செய்திருக்கிறது. இடையில் என்ன நடந்தது?

தென்னிந்தியாவின் ஒரே டிரைவ் இன் திரையரங்கம் என்பதற்காக சென்னையில் உள்ள பிரார்த்தனா திரையரங்கின் சிறப்புக் கட்டணமுறை தொடரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அது சாதாரண ரசிகர்களை பெரிதாக பாதிக்கப்போவதில்லை என்பதால் ஏற்கலாம். மற்ற திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளும் விதிகளும் சாதாரண, நடுத்தர ரசிகர்களைப் பாதிக்கும் வித்த்திலேயே இருக்கிறது.

ரஜினியின் சிவாஜி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் கட்டணக் குறைப்பால் நஷ்டமடையும் என்பதாலேயே அவர்கள் கொடுத்த அழுத்தத்திற்கு பணிந்து அரசு கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்று கூறுகிறார்கள்.

காசைக் கரியாக்கும் பெரிய பட்ஜெட் படங்களை ஆதரிப்பதா அரசின் கடமை? என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? சும்மா மூன்று நிமிட பாடல் காட்சிக்கு 4 கோடி செலவில் வெளிநாட்டில் சூட்டிங். ஒரு நிமிட மாறுவேடத்திற்கு 1 கோடி செலவில் வெளிநாட்டு மேக்கப், கார்களை உடைக்க காயலான் கடைக் கார்களைக் கூட வெளிநாட்டில் தேடும் பெரிய பட்ஜெட் சினிமாக்காரர்களை ஊக்குவிக்க வேண்டுமா? அல்லது நல்ல கதையம்சத்தோடு குறைந்த செலவில் தரமான படமெடுத்தும், பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு மத்தியில் விளம்பரச் செலவுக்கு பணமில்லாமல் காணாமல் போகும் குறைந்த பட்ஜெட் படங்களை ஊக்குவிக்க வேண்டுமா?

07:30 Posted in சினிமா | Permalink | Comments (4) | Email this | Tags: cinema, theatre |  del.icio.us | | Digg! Digg

Saturday, 23 December 2006

ரஜினிமகள் கிராபிக்ஸ்

Click to view Larger Image
ரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் திகில் படம் நஞ்சுபுரம். இதில் கதாநாயகனாக நடிக்கும் ராகவ் ஒரு பல்துறைக் கலைஞர். சின்னத்திரை நடிகராக அறியப்பட்டிருக்கும் அவர் வசந்த் இயக்கிய 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' என்ற படத்துக்கு இசையமைத்த ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவர்.

கதாநாயகி மோனிகா. இம்சை அரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மோனிகாவுக்கு இது குறிப்பிடத்தக்க படமாக இருக்கும். கவர்ச்சியிலும் கலக்கியிருப்பதாக தெரிகிறது.

ஆன்டனி ஒளிப்பதிவு செய்ய, பாடல்கள்-வசனத்தை மகுடேஸ்வரன் எழுதியிருக்கிறார். திரைக்கதை-இயக்கம்: சார்லஸ். தயாரிப்பு: இல்லுசன்ஸ் இன்பைனைட்.

திரில்லர் படமான நஞ்சுபுரத்தில் வரும் பயங்கரமான கிராபிக்ஸ் காட்சிகளை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தனது அக்கர் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம் முழுக்க டிஜிட்டல் முறையில் ஒளிப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

04:50 Posted in சினிமா | Permalink | Comments (0) | Email this | Tags: cinema |  del.icio.us | | Digg! Digg

Wednesday, 20 December 2006

வீடியோ பாட்டு-1


பாட்டுக் கேட்டுட்டு... படம் பாத்துட்டு... எப்படின்னு சொல்லுங்க!

நான் ரொம்ப...ரசிச்சேன் இதை!

பாட்டும் இனிமை. அதிலுள்ள காட்சிகளும் இனிமை.

நகைச்சுவை இழையோட இசைத்தாளம் போடும் சுவையான காட்சிகள்!

17:30 Posted in சினிமா | Permalink | Comments (2) | Email this | Tags: cinema, song, video |  del.icio.us | | Digg! Digg

All the posts