Saturday, 31 March 2007
❒ பந்த் என்னும் முட்டாள்தனம்
இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிரான குரல் என்பது சரிதான். அது தேவையும் தான். அந்த எதிர்ப்பை காட்ட எத்தனையோ முறைகள் இருக்கின்றன. மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசுகள் இந்த மாதிரி பந்த் களை ஊக்குவிப்பது குறித்து எனக்கு உடன்பாடில்லை.
முதல்வரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அடையாள உண்ணா விரதமிருந்திருக்கலாம். நாடு முழுவதும் மக்கள் ஆதரவுடன் அரசியல் கட்சிகள் இதைச் செய்திருக்கலாம். கறுப்புக் கொடிகட்டி எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம். அரசு அலுவலகங்களிலும் கறுப்புச்சின்னம் வைத்து எதிர்ப்பை காட்டியிருக்கலாம். வேறு எத்தனையோ முறைகளில் எதிர்ப்பை காட்டியிருக்க முடியும்.
வேலை நிறுத்தம் என்பது மக்களுக்கு இடையூறு மட்டுமல்ல அது ஒரு சமூக சமாதான, பொருளாதார வீணடிப்பு. இந்த முட்டாள் தளத்திற்கு எதிராக என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு இப்படி போராட்டம் பந்த் என்று செல்வது மிகப்பெரிய மூடத்தனம்.
நீதிமன்றத்தில் தேவையான அளவுக்கு ஆதாரங்கள் கொடுக்கப் படாதது, நீதிமன்றம் திருப்திப் படும் அளவுக்கு அரசு சார்பிலான வாதங்கள் அமையாதது போன்றவையே இம்மாதிரியான தீர்ப்புகளுக்கு காரணம். எதிர்தரப்பு சொல்லும் வாதத்தை நொறுக்க வேண்டிய கடமை அரசு வக்கீல் களுக்கு உண்டு. அதில் கோட்டை விட்டு விட்டு இப்படி ரோட்டுக்கு வந்து போராட்டம் செய்வது அதனினும் மூடத்தனம்.
06:45 Posted in அரசியல் | Permalink | Comments (34) | Email this
| Tags: banth, பந்த் |
del.icio.us
|
|
Digg

