Saturday, 01 March 2008
❒ ஸ்டெல்லா புரூஸ்
தமிழில் குமுதம் விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில் அது ஒரு மழைக்காலம், எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி, அது ஒரு நிலாக்காலம் போன்ற கதைகளின் மூலம் 90களில் பிரபலமாக இருந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்.
விருதுநகரில், செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்து டி.வி.எஸ் ஏஜென்சியை நடத்திக் கொண்டிருந்த இவர் எழுத்தார்வம் காரணமாக தொழிலை கவனிக்காமல் இழப்புகளைச் சந்தித்தவர்.
உரியவயதில் திருமணமும் செய்துகொள்ளாமல் நடுத்தர வயதில் காதல் வயப்பட்டு ஹேமா என்பவரை மணந்தார். குழந்தைகள் இல்லாத நிலையில் காதல் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேலும் வறுமையின் பிடியில் சிக்கினார்.
சிறுநீரகக்கோளாறு காரணமாக நீண்டநாள் சிகிட்சையும் பலனளிக்காமல் மனைவி இறந்துவிட தனிமை, வறுமை துரத்த கற்பனைகளில் வாழ்ந்த அந்த கதாசிரியன் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
ஸ்டெல்லாபுரூஸ் என்ற பெயரில் எழுதிய அவரது இயற்பெயர் ராம்மோகன்.
13:00 Posted in இலக்கியம் | Permalink | Comments (22) | Email this
| Tags: Stellia Bruce, ஸ்டெல்லா புரூஸ் |
del.icio.us
|
|
Digg

