Wednesday, 23 July 2008
❒ பாவனா கவுஜ/வஜனப் போட்டி
இந்தப் படத்தை பற்றி சின்னதா கவுஜ அல்லது வஜனம் அதாங்க டைலாக்கு எதுனாச்சும் எடுத்து உடுங்க...பெஸ்ட் வஜனத்துக்கு ஒரு பரிசு உண்டு.

இது எந்தப் படத்தில் இடம் பெறும் காட்சி?
என்ன பாடல்?
இது உப கேள்வி ;)
09:00 Posted in விளையாட்டு | Permalink | Comments (9) | Email this
| Tags: சினிமா, பாவனா, கவிதை, bhavana, cinema |
del.icio.us
|
|
Digg
Thursday, 20 December 2007
❒ பூக்களில் உறங்கும் மவுனங்கள்

காதல் ஜோடிகள் முதல்
கடலை விற்பவர் வரை
வருவோர் போவாரெல்லாம்
பேசிக் கொள்ள
பேசிக் கொல்ல...
சந்தோஷங்கள் என்றாலும்
சங்கடங்கள் வந்தாலும்...
பகிர்ந்து கொள்ளப் பூங்காக்கள்...
அங்கே பேசாதிருப்பவை
பூக்கள்...
பூக்கள் மட்டுமே.
ஆசைகள், அவலங்களென
மக்கள் இறக்கி வைத்த
மனப் பாரங்களைச் சுமந்து
பூக்களில் உறங்கும் மவுனங்கள்!
...
14:15 Posted in இலக்கியம் | Permalink | Comments (6) | Email this
| Tags: கவிதை |
del.icio.us
|
|
Digg
Tuesday, 06 March 2007
❒ முலைகள் என்னும் கெட்டவார்த்தை
தமிழ்நதியின் குட்டி ரேவதி நேர்காணல் தந்த உணர்வலைகள்
சின்ன வயதில் அதிகமும் வெளியூர்களில் இருந்ததால் ஊர் பழக்க வழக்கங்கள் பற்றி அதிகம் தெரியாது. என் 23ம் வயதில் திரும்ப ஊருக்கு வந்த பிறகு கெட்டவார்த்தைகள் என்று சொல்லப் படுகிற வார்த்தைகள் சின்னக் குழந்தைகளின் வாய் வழிக் கூட புகுந்து புறப்படுவது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகவே எனக்குத் தென்பட்டது.
குமுதம் விகடன் கல்கி வழி கட்டமைக்கப் பட்டிருந்த என் வெளியுலக சிந்தனைகள் எனக்குத் தந்த அதிர்ச்சி அது. அதற்குள்ளாக தமிழின் ஏராளமான இலக்கியங்களை? வாசித்திருந்தாலும் அவையும் மணிப்பிரவாள, செந்தமிழ் நடையில் தந்திருந்த பிம்பங்களில் அந்தச் சொற்கள் இருக்கவில்லை. அந்தச் சொற்களின் பொருள் அதற்கு மேலான அருவ்வெறுப்பை அளித்தது. பல நாட்கள் அந்த அருவெறுப்பின் குமட்டலில் தவித்திருக்கிறேன்.
சில நாட்களிலேயே இன்னொரு உண்மை எனக்குப் புரிபட்டது. அப்படி அருவெறுப்பான வசை மழை பொழிந்த இரண்டு பேர் மூன்றாம் நாள் தோளில் கை போட்டபடி என்னைக் கடந்து சென்ற காட்சி தந்த அதிர்ச்சி விவரிக்க முடியாதது. அப்படியொரு வார்த்தையை பேசி விட்டு மறுபடி எப்படி இவர்களால் சகஜமாக இருக்க முடிகிறது?
பின்னரே கோபத்தை வெளிப்படுத்தும் வெற்று வசைகளாகத்தான் அவர்கள் அதைப் பயன் படுத்துகிறார்கள் என்பதும் எப்போது சொல் வெளியாகிறதோ அப்போதே ஆத்திரமும் வெளியேறி விடுகிறது என்பதையும் அறிந்து கொண்டேன். நாவினால் சுட்ட வடு... எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்! அது இங்கே உதவாது...
அந்த வெ...ளி.. , தா...ளி.. உள்ளிட்ட ஏராளமான வசைச் சொற்களில் எந்த உட்பொருளும் அவர்களிடையே இல்லை. குறிப்பாக தாயைப் புணர்ந்தவனே என்பது பல வசைச்சொற்களின் நிரந்தர கருப்பொருளாக இருந்த போதிலும் அந்த வசை அவர்களில் எந்த அருவெறுப்புக்கும் குறிப்பிட்ட பொருள் உணர்த்தும் வசைக்கும் காரணமாக இருக்கவில்லை. மாறாக ஒரு கோபக்குறிச் சொல்லாக மட்டும் பயன்படுத்தப் படுவதால் பொருளுரைக்கும் நமக்குத் தவிர பயன்படுத்தும் அவர்களுக்கு எந்த வெறுப்புணர்வும் அருவெறுப்பும் ஏற்படவில்லை எனக் காண முடிந்தது.
பின்னர் சிற்றிதழ்களோடு பரிச்சயமேற்பட்ட போது அவற்றில் இந்த வசைகள் பயன்படுத்தப் பட்டு வந்த போது படித்தவர்களும் இதை எழுதுகிறார்களே? அவர்கள் இதன் பொருளுணராமலா பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி என்னைக் குடைந்தது.
மக்களின் இயல்புச் சொற்களை வட்டார வழக்காக பயன்படுத்துவதும் அதே நோக்கத்தில் தான் என்பதையும் இலக்கியத்தின் மீறல் பண்பும் உணர ஆரம்பித்த போது தான் என்னால் இயல்பாக இவற்றை எதிர்கொள்ள முடிந்தது.
உண்மையில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. மக்கள் சரளமாக பயன்படுத்தும் சொற்களை வட்டார வழக்கில் இயல்பாக பயன்படுத்தும் வகையான இலக்கியம் தவிர இந்த பெண்ணியப் படைப்புகளில் கூறும் உடல் மொழி குறித்த இயல்பான படைப்புகள் மற்றவர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இலக்கியத்தின் மீறல் என்பது வெற்று வார்த்தைகளல்ல. அவை கலாச்சார தளத்தில் நிச்சயம் அதிர்ச்சி அலைகளை தோற்றுவிக்கும். தோற்றுவிக்க வேண்டும். சிந்திக்கப் பட வேண்டும் அவை ஏன் சொல்லப் படுகின்றன என்பதன் காரணம் உணரப் பட வேண்டும்.
முலைகளை எழுதும் பெண்களை சுட்டுக் கொல்லத் துடிக்கிற பெருங்கவிகள் இடுப்பு துடிக்குது ரவிக்கை வெடிக்குதுன்னு பாட்டெழுத முடிகிற கவிப் பெருந்தகைகளை என்ன செய்யப் போகிறார்கள் என்று சொன்னால் தேவலாம். கல்யாணம் கட்டிக்காமல் பெத்துக்காலான்னு மூணு வயசு குழந்தை கூட பாடுதே இதுக்கு எந்த பெண்ணியக் கவி காரணம்? தாய்மையின் முலைகளை எழுதக்கூடாதென்னும் கவிஞர்கள் பெண்ணின் பருவச் சமைதலை ஆபாசப் பாட்டாக விற்கலாம். அவர்களுக்கு விருதுகளும் வழங்கிச் சிற்பிக்கலாம். வாழ்க்கையை எழுதுகிற பெண்களை துரத்தித் துரத்தி கல்லாலடிக்கலாம்.
என்ன செய்ய எனக்கு 23 வயதில் கிடைத்த ஞானம் இவர்களுக்கு இன்னும் வரவில்லை என்று தோன்றுகிறது.
-oOo-
...சில சமயம் கழிச்சல் துடைப்பதற்கு உதவலாம் என்ற போதிலும் ஏடுகள் எல்லாவற்றுக்கும் உதவாது...சமூகத்தின் அனுபவ பாடங்கள் ஏடுகளில் கிடைக்காது. அனுபவ அறிவே கிடைக்காமல் பீடங்களில் இருந்து கொண்டு பீற்றிக் கொள்ளுகிறவர்களை படைப்பாளிகளாக ஏற்பது தமிழின் சாபக்கேடு. வாழ்க்கையை படித்து எழுதப் படும் எழுத்தின் வீரியம் அவற்றில் இல்லை.
குறிப்பு: நான் படித்த புத்தகங்களில் இருந்த தாய்ப்பால் கிராமங்களில் இல்லை. அங்கே இருப்பதெல்லாம் முலைப்பால் மட்டுமே!
08:05 Posted in இலக்கியம் | Permalink | Comments (17) | Email this
| Tags: kavitai, கவிதை, தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg

