« 2008-07-01 | ^வலைவீடு^ | 2008-07-10 »

Wednesday, 02 July 2008

❒ பாலபாரதியும் பகவத்கீதையும்

எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்.


Image and video hosting by TinyPic
*
கீதாசாரம் என்று எங்கும் காணப்படும் இந்த புகழ் பெற்ற வாசகம் பகவத்கீதையில் இல்லை என்று பாலபாரதி எழுதியதைப் படித்தவுடன் பகவத் கீதையை எடுத்து தே........டிப்பார்த்தேன். உண்மை தான். எங்குமே அப்படி ஒரு வாசகம் காணப் படவில்லை. எவரோ இது தான் கீதையின் சாரம் என்று இப்படி ஒரு வசனத்தை எழுதி வெளியிட்டிருக்க வேண்டும்.

யார் எழுதிய வாசகம் இது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
நம்ம ஆன்மீகப் பதிவர்கள் இந்த விஷயம் குறித்து என்ன கருதுகிறார்கள்?

15:00 Posted in விமர்சனம் | Permalink | Comments (4) | Email this