☜ ★ வாசிக்க வாருங்கள் | H | ★ காசியுடன் ஒரு வலையுரையாடல் ☞
Wednesday, 28 November 2007
★ ரஜினி, விஜய் மற்றும் பாமக
பதினாறு வயதினிலே திரைப்படத்தில் பரட்டையாக வந்தார் ரஜினி. நடிகர் விஜய் எல்லாப் படங்களிலும் பரட்டைத் தலையுடன் நடித்து வருகிறார். இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?
எதுவுமே இல்லை. ஆனால் இருவருக்கும் இருந்த பொருத்தம், இருவரின் படங்களிலும் புகைபிடிக்கும் காட்சிகள் சரளமாக அமைந்திருக்கும். அதுவே அவர்களின் நாயகத் தன்மைக்கான ஸ்டைலாகவும் திரைப்படங்களில் கட்டமைக்கப் பட்டிருக்கும்.
பாபாவில் ரஜினியின் புகைப் பிடிக்கும் போஸ்தான் போஸ்டர்களில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. பாமக ரஜினிக்கு எதிரான தனது போராட்டங்களை இது போன்ற காட்சிகளுக்கு எதிரானதாக காட்டி மக்களின் ஆதரவையும் திரட்டியிருந்தது.
விளைவு, ரஜினியின் அடுத்த படங்களில் புகைக்கும் காட்சி எதுவும் இல்லை. இப்போது ரஜனியின் அந்தப் பழக்கத்தை மேற்கொள்பவர் நடிகர் விஜய்...
மத்திய சுகாதார அமைச்சர். அன்புமணி இம்முறை விஜய்க்கு புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியிருந்தார். உடனடியாக விஜயும் இனி அம்மாதிரி காட்சிகள் தன்படங்களில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதாக அறிவித்து விட்டார்.
பாமகவின் கலாச்சாரக் காவலர் அவதாரம் பல நேரங்களில் அத்துமீறிப் போய்விடுவதாக தோன்றியதுண்டு. ஆனால் இதுபோன்ற செயல்பாடுகள் நிச்சயம் அவசியமானவை தான்.
நடிகர்களையே இன்றைய இளைய தலைமுறை தங்கள் ஆதர்ச புருசர்களாக நினைத்து வளர்கின்ற சூழலை நமது பல்லூடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. திரையரங்கில் படம் பார்த்து தீவிர ரசிகர்களாக மாறுபவர்களை விட பலமடங்கு அதிக பாதிப்பை இன்று சின்னத்திரை வழியாக பெரிய திரைக் காட்சிகள் அளித்து வருகின்றன.
இந்தப் படத்துக்கும் பதிவுக்கும் இருக்கும் தொடர்பு ;) புகை!!!!!!
பக்கத்து வீட்டு பிளஸ்டூ மாணவி நோட்டுப் புத்தகம் வாங்கிவர தன் தம்பியை கடைக்கு அனுப்பினாள். சூர்யா படம்போட்டது தான் வேண்டும் என்றாள். தம்பி கடைக்குப் போய் சூர்யா படம் இல்லை என்று விஜய் படம் போட்ட நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்து தந்தான். உடனே தம்பியை விரட்டி மீண்டும்அதைத் திருப்பிக் கொடுத்து வேறு கடையில் சூர்யா படம்போட்ட புத்தகம் வாங்கித் தரும்வரை அவள் விடவில்லை...அதைவிட நோட்டுப் புத்தகம் கைக்கு வந்ததும் அவள் செய்த செயல் என்ன தெரியுமா?.... உயிருக்குயிரான காதலனை முத்தமிடுவது போல அவள் அந்தப் புத்தகத்தில் இருந்த சூர்யா படத்தை முத்தமிட்டாள். பருவ வயதின் ஆர்வக்கோளாறு தான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட நடிகரின் மேல் இத்தனை கிரேஸ் வர காரணமாக இருந்தவை தொலைக்காட்சி சானல்கள் தான். இத்தனைக்கும் அந்தப் பெண் திரையரங்கில் சினிமா பார்த்ததே இல்லை.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
13:40 Posted in விமர்சனம் | Permalink | Comments (8) | Email this
| Tags: புகை, சினிமா, ரஜினி, விஜய் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
என்னைப் பொருத்தவரை சினிமாவால் ஒரு சராசரி மனிதனின் நடைமுறைகளை மாற்றமுடியும் என்பதை ஒத்துக்கொள்ள இயலாது. உதாரணத்திற்கு நாம் காந்தியவாத கருத்துக்களை மட்டும் கூறும் படங்களை மட்டும் ஒளிபரப்புவோமேயானால் யாரும் சிறிது நாட்களுக்குப் பிறகு அதைக்காண விரும்பமாட்டார்கள்... ஆக மக்களின் மனதில் ஏதோ ஒன்று ஏற்கனவே உள்ளது அதைத்தான் அவர்கள் திரைப்படத்தில் விசுவலாக காட்டுகிள்றனர். மக்கள் விருப்பதிற்கேற்ப படங்களே தவிற... வேறோன்றுமில்லை!!
கூறுவது: சுந்தர் | Thursday, 29 November 2007
-
மனிதன் எதை சுலபமாக செய்யமுடியுமோ அதை தான் எடுத்துக்கொள்கிறான் யாரும் பிறக்கும்போதே புகைத்துக்கொண்டோ அல்லது குடித்துக்கொண்டோ பிறப்பதில்லை அவனுடைய பழக்கவழக்கங்களுக்கு காரனம் சுற்றுசூழலே அவன் வித்தியாசமாக கானும் பொருள் கன்னெதிரில் எளிதிகிடைக்குமானால் அவன் எளிதில் அத்ற்க்கு அடிமை ஆகிவிடுகிறான் ஒரு வன் அதிகனேரம் டீவி யுடன் கழிக்கிறான் என்றால் அவனுடைய பழக்க வழக்கங்கள் அவன் பார்க்கும் டீவி சேனல் தான் தீர்மானிக்கிறது ரேஷன் கார்டு கொடுத்தால் தான் கடையில் சிகரெட் கிடைக்கும் என்று கூறுங்கள் கட்டாயம் 90 சத இலைஞர்கள் புகைப்பழக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவருக்கு புகயிலை தயாரிப்புகளை வழங்குவது குற்றம் என்று அறிவித்திருப்பதை ஆண்டுதோரும் ஒரு வயதை உயர்த்துங்கள் 19 வயது 20 வயது என்று 10 ஆண்டுகளில் புகைப்போர் பாதியாக குறைந்துவிடுவார்கள்
கூறுவது: ராமஜெயம் | Friday, 30 November 2007
-
mullai mullal eduppom
cinema kalachara seeralivu
athe cinemavai kondu panpattai kappatra iyalumகூறுவது: R.KANAGARAJ | Monday, 19 May 2008
-
vijay is verry good hero
and all movie of vijay is verry better
rajini not better
vijay next super hero
www.superstarvijay.blogspot.comகூறுவது: kanojan | Tuesday, 30 September 2008
-
Vijay is Superatar!
Rajani is poor!
so vijay is the Bestகூறுவது: Diviya sasa | Monday, 04 May 2009
-
We are not talk about hero(Rajini and Vijay) pl dont play.This is not a matured.
கூறுவது: N.Balaji | Wednesday, 06 May 2009
-
hi
கூறுவது: sudha | Thursday, 25 June 2009
-
Rajini si a real hero
கூறுவது: comments | Wednesday, 08 July 2009
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



