❒ அஞ்ஞானி முதல் தமிழச்சி வரை | H | ❒ கொலு வைக்கணுமா?

Saturday, 13 October 2007

4. எனக்கு-16 உனக்கு-12 ♂♀

உண்மைக்காதலை விட சினிமாவில் காணும் காதலுக்கு வெளிப்பூச்சுகள் அதிகம் என்பது நமக்குத் தெரியும். நிஜக்காதல் அத்தனை கனவுப்பூர்வமானதல்ல. அதில் எதார்த்தம் அதிகம். அதே சமயம் சினிமாவை மிஞ்சிய காமக்கூத்துகள் பலருக்கு நித்திய ஜீவிதமாக இருப்பதும் நிஜம்.

இங்கே நாம் காணும் வாழ்க்கைக் காதல் நிஜமானது.இந்தக் கதை மாந்தர்கள் இன்னும் இந்த மண்ணில் வாழும் சகஜீவிகள். இது தோற்ற காதல் தான் ஆனால் அந்தத் தோல்வியின் விளைவுகள்...அவற்றை நாம் எந்தச் சினிமாவிலும் கண்டதில்லை.

இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பித்து அதிக நாட்கள் ஆகிவிட்டன. இப்போது கற்றது தமிழ் - தமிழ் எம்ஏ, திரைப்படச் செய்திகளை வாசிக்கும் போது ஏனோ இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்து விட்டது. அது ஏனென்று உங்களுக்கும் போகப் போகப் புரியும்.

இனி நாம் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.

தொடரின் முந்தைய பாகங்கள்.
பாகம்-1 | பாகம்-2 | பாகம்-3

♂♀

Image and video hosting by TinyPicஒரு நாள் பதினோராம் வகுப்பிலுள்ள ஒரு மாணவனிடம் ஏதோ கேட்பதற்காக செல்வன் அங்கே சென்றான். அவன் வகுப்பறைக்குள் நுழையவும் பல்லவி எதிரே வந்து அவனை முட்டிக் கொள்ள இருந்தாள். சட்டென்று சுதாரித்து நின்று விட்டாள். உள்ளே நின்று கொண்டிருந்த மாணவனையே பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த அவனும் எதிரே குறுக்கே வந்தவளை சட்டென்று கவனித்து அங்கேயே நின்று விட்டான்.

முகத்தோடு முகம் நோக்க இருவருக்குள்ளும் பழைய நினைவுகள் மீண்டும் கிளர்ந்தெழுந்தன. கண்ணும் கண்ணும் கலந்தது. காதல் மீண்டும் மலர்ந்தது.

இம்முறை காதலுக்கு வில்லன்கள் எவரும் இல்லை. காதல் மிக கண்ணியமாக வளர்ந்தது. தினமும் அவள் வரும் பாதையில் காத்திருப்பு. முகதரிசனம். வாரம் ஒரு மடல்பரிமாற்றம். அவ்வளவுதான். எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களின் கவனம் பட்டுவிடக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

அரையாண்டுத் தேர்வு சமயம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. பக்கத்து ஊர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற அந்தக் கண்காட்சியில் எங்களுக்கும் ஒரு அறை ஒதுக்கப் பட்டிருந்தது. நாங்களும் சில காட்சிப் பொருட்களுடன் செயல்விளக்கம் தந்து கொண்டிருந்தோம். எங்கள் பள்ளியில் இருந்து பார்வையிட வந்த மாணவமாணவிகளுடன் பல்லவியும் இருந்தாள். எங்கள் பள்ளிக்கு வெளியே முதன்முதலாக அவர்கள் சந்திக்க ஒரு வாய்ப்பு. தோழர்கள் உசுப்பி விட அவனும் சைகை செய்து அவளைத் தனியாக்கி ஒரு மரத்தடியில் அவர்கள் சந்தித்தார்கள்.

அந்த முதல் சந்திப்பில் தனிமைச் சந்திப்பிலும் அவர்கள் அதிகம் பேசிவிடவில்லை. காதல் வசனங்கள் அறவே இல்லை. அவன் பேசியது 'படிப்பு முடிந்து ஒரு வேலை கிடைத்த பிறகு தான் திருமணம். தங்கையின் திருமணம் முடியவேண்டும்.' அவளுக்கு மறுப்பேதும் இருக்கவில்லை.

அந்த ஆண்டு படிப்பு முடிந்தது. அவன் கல்லூரியில் சேர்ந்தான். கல்லூரி பக்கத்து ஊரில் இருந்தது. பேருந்தில் செல்ல வேண்டும். பேருந்து நிறுத்தம் வழியாகத்தான் அவள் பள்ளிக்குச் செல்வாள். அவனைக் கடக்கும் நொடியில் விரியும் அவளது புன்னகை தரிசனம் கிடைத்த பிறகே கல்லூரிக்கு செல்வான். அவள் வரத் தாமதமானால் அவனும் பேருந்துகளைத் தவறவிடுவான். அவள் வராத நாட்களில் அவனுக்கும் விடுப்பு. அவ்வப்போது மடல்களும் பரிமாறிக் கொள்ளப் பட்டன.

இப்படியாக அந்த ஆண்டும் கடந்தது. பல்லவி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்றாள். நன்றாகப் படிக்கிற மாணவி...அதுவும் பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பில் தோற்றது எல்லோருக்கும் புதிராக இருந்தது. மூன்று பாடங்கள் தோல்வி. தனித்தேர்வில் எழுதிக் கொள்ளலாம்தான். ஆனால் ஏழைக்குடும்பம்.ஓரே மகள். அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு போதுமென்று அவர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்கள்.

கோடை விடுமுறை தொடங்கியதிலிருந்து அவர்களின் தினசரிச் சந்திப்பு தடைப்பட்டு விட்டது.

பல்லவி பயந்தாள். அவனுக்குத் தூதுவிட்டாள். அவளின் தோழியொருத்தியின் வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்தாள்.

அவள் பதட்டத்தோடு விவரித்தாள். அவனோ ஆறுதல் படுத்தினான். பொறுமை காக்க புத்தி சொன்னான். வேலை கிடைத்தால் தான் திருமணம் என்பதை மீண்டும் வலியுறுத்தினான்.

அது வரை காத்திருக்க சூழல் அனுமதிக்காது என்பதை எடுத்துச் சொன்னாள். அப்படியொரு நிலைவந்தால் வீட்டை விட்டு வந்து விடுவதாக சொன்னாள். அவன் பதில் பேசவில்லை.

வீட்டில் நிலவரம் கலவரமானது. நெருக்கடி முற்றியது. பெண்பார்க்க வந்தவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டனர். திருமணநாள் குறித்து விட்டார்கள்.

வீட்டை விட்டு வரப்போவதாக அவள் அவனுக்கு எழுதினாள். அவன் ஏற்கவில்லை. சாதி வேறுபாட்டை தன் உறவும் சுற்றமும் ஏற்காது. வாழவோ கையில் பணமில்லை. வேலை இருந்தால் மட்டுமே உறவுகளின் துணையின்றி வாழமுடியும் என்று அவன் சொன்ன பதிலால் அவள் இடிந்து போனாள்.

ஆம்... அவள் தாழ்த்தப் பட்ட சாதியொன்றில் பிறந்தவள். அவனோ ஆதிக்க சாதியொன்றின் பிரதிநிதி. அவனுக்கு நிதரிசனம் புரிந்தது. தன் கையறு நிலையும் தெரிந்தது.

அவளுக்கோ தன் காதலன் தன்னைக் கைவிட்டதின் விரக்தி. முடிந்தவரை போராடினாள். முடியவில்லை.

தேடிச் சென்ற வாழ்க்கை கைவிட்டதால் தேடிவந்த வாழ்க்கையை ஏற்றாக வேண்டிய நிலை. அவள் பெற்றோர் பார்த்துவைத்த மாப்பிள்ளைக்கு மணமாலை சூட்டினாள். அடுத்தவன் மனைவியாகி அயலூருக்குப் பயணமானாள்.

(தொடரும்)


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

05:35 Posted in வாழ்வியல் | Permalink | Comments (2) | Email this | Tags: love, காதல் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. test

    கூறுவது: ☆ சிந்தாநதி | Saturday, 13 October 2007

  2. very good store thans

    கூறுவது: dan | Monday, 21 September 2009

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)