Wednesday, 02 July 2008
❒ பாலபாரதியும் பகவத்கீதையும்
எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

*
கீதாசாரம் என்று எங்கும் காணப்படும் இந்த புகழ் பெற்ற வாசகம் பகவத்கீதையில் இல்லை என்று பாலபாரதி எழுதியதைப் படித்தவுடன் பகவத் கீதையை எடுத்து தே........டிப்பார்த்தேன். உண்மை தான். எங்குமே அப்படி ஒரு வாசகம் காணப் படவில்லை. எவரோ இது தான் கீதையின் சாரம் என்று இப்படி ஒரு வசனத்தை எழுதி வெளியிட்டிருக்க வேண்டும்.
யார் எழுதிய வாசகம் இது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
நம்ம ஆன்மீகப் பதிவர்கள் இந்த விஷயம் குறித்து என்ன கருதுகிறார்கள்?
15:00 Posted in விமர்சனம் | Permalink | Comments (4) | Email this
Tuesday, 01 July 2008
❒ அகரவரிசைக்கு ஒரு மென்பொருள்
தமிழ் எழுதுகருவியான NHM Writer மற்றும் NHM Convertor ஆகியவற்றைத் தந்த நியூ ஹொரைசான் மீடியாவின் தொழில் நுட்பக் கலைஞர் திரு நாகராஜனின் புதிய படைப்பு NHM Lister
இது ஒரு ஆன்லைன் கருவி.
இதன் பயன்கள்.
யூனிகோடில் எழுதப் பட்ட தமிழ் பட்டியல்களை உருவாக்க, ஒரே சொடுக்கில் அகர வரிசைப் படுத்த உதவுகிறது. ஆங்கிலச்சொற்கள், எண்கள், சின்னங்களை நிராகரித்தோ இணைத்தோ பட்டியலை வரிசைப் படுத்த முடியும்.
தனிச் சொற்களின் எண்ணிக்கை, மொத்தச் சொற்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டுத் தருகிறது. அகர வரிசைப் படுத்தப் பட்ட பட்டியலை சொற்களின் எண்ணிக்கையுடனோ தனிச் சொற்களின் பட்டியலாகவோ copy செய்து கொள்ளலாம்.
பட்டியல்களை உருவாக்க, வரிசைப்படுத்த, சொற்களைக் கணக்கிட என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு கருவி அவசியமாக இருக்கும். இதன் பயன்கள், நிறைகுறைகள் பயனாளிகளின் தேவையின், பயன்பாட்டின் அடிப்படையில் இருக்கும்.
குறையாடுகள் ஏதேனும் இருந்தாலோ, இன்னும் தேவையான வசதிகள் பற்றியோ தெரிவித்தால் நண்பர் நாகராஜன் இக்கருவியை மேம்படுத்த உதவும்
http://software.nhm.in/Services/NHMLister/tabid/72/Defaul...
05:55 Posted in internet , இணையம் , கணித்தமிழ் | Permalink | Comments (1) | Email this | Tags: மென்பொருள், இணையம்
Monday, 30 June 2008
❒ சுகுணா திவாகருக்கு...
ஒரு பதிவும் சில சிந்தனைகளும்...
சினிமா நிருபருக்கு ஒரு கவனக் குறிப்பு என்ற தலைப்பிலான சுகுணா திவாகரின் பதிவு சினிமா நிருபர் வெளியிட்ட படம் குறித்த கேள்வியினூடே நம் சமூகத்தில் பெண்ணை நுகர்பொருளாக கருதும் கலாச்சாரத்தை கேள்விக் குள்ளாக்குகிறது.
அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி கதைக்கான அவசியம் கருதி ஜாக்கெட் போடாமல் நடித்தாகவும் அதை கவர்ச்சி விருந்தாக கருதக் கூடாது என்பதும் சுகுணாவின் கருத்து. ஆனால் அதில் எனக்கு சற்று மாறுபாடான கருத்து உண்டு. படத்தில் சுஜிபாலா நடித்தது வேண்டுமானால் அவசியம் கருதி...எனலாம். ஆனால் குறிப்பாக அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு தந்து வெளியிட வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதை கவர்ச்சி விருந்தாக கருதாமல் தான் வெளியிட்டார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?
பத்திரிகைகளும் இணையதளங்களும் வெளியிட்ட படங்கள் எவையும் அவர்கள் தாங்களாக எடுத்து வெளியிட்டவை அல்ல. அவை அனைத்துமே படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவால் வெளியிடப் பட்டவைதான். கவர்ச்சி விருந்து படைக்க விரும்பவில்லை என்றால் சுஜிபாலா ஜாக்கெட் போடாத படத்தை அவர்கள் வெளியிட்டிருக்க தேவையில்லை. கதாநாயகியின் கவர்ச்சி படத்தின் விளம்பரத்துக்கு அவசியம் என்பதாலேயே அவர்களும் அதை வெளியிட்டுள்ளனர்.
மேலும் நீங்கள் புரட்சிக் கருத்து கூறும் படம் என்று கருதும் படம் உண்மையாகவே அதற்குத்தான் பயன்படப் போகிறதா அல்லது இன்னொரு வகையில் பக்திப் பரவசமூட்டும் படமாக கருதப்படுகிறதா என்பதையும் சற்றே சிந்திக்கலாம்.
வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார். அவரது பக்தகோடிகள் மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் புனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே உங்கள் பதிவின் தொனி இருக்கிறது.கற்புக்கு எதிராகப் பேசிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிக்கலாமா என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
சினிமா ஒரு போதும் உண்மையான வரலாறாக இருப்பதில்லை என்பதை உங்கள் பதிவிலேயே சொல்லி இருக்கிறீர்கள். திரையரங்கினுள் திரைப்படம் ஓடும்போது அந்தப் படம் சொல்லும் செய்தி சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். திரைக்கு வெளியே புனிதங்களை ஏற்றிப் பார்ப்பது அவசியமற்றது.
04:55 Posted in விமர்சனம் | Permalink | Comments (5) | Email this | Tags: அய்யாவழி, சினிமா
Saturday, 28 June 2008
❒ புரூஸ்லீ ரசிகர்களுக்கு...
வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும்
‘‘இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், நீ உன் பள்ளியை இழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென்.
அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புரூஸ்லீ, எவ்விதத் தயக்கமும் இன்றி, சவாலுக்குச் சம்மதித்தார்.
சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீ&யின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது.
‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக்கொண்டீர்கள்?’’
நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவலை இன்றி, நானும் என் கலையும் புகழ்பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக்கொண்டேன்’’ என்றார் புரூஸ்லீ. 25 வயது வரை ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ்லீ, உலகப் புகழ் பெற்றது அதன் பிறகே!
சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சீனத் தம்பதியரின் மகனாக, 1940&ல் பிறந்தார் புரூஸ்லீ. குடும்பம் சீனா திரும்பியதும், குழந்தை நட்சத்திரமாகப் பல நாடகங்களில் நடித்தார்.
பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக் கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18&வது வயதிலேயே பாக்ஸிங் சேம்பியன்ஷிப் வெற்றி. இதையடுத்து, புரூஸ்லீ அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலீஸ் பிரச்னை ஏற்படவே, பெற்றோர் அவரை சான்பிரான்சிஸ்கோ அனுப்பினர்.
அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ்லீ, வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் தத்துவம் படித்தார். கூடவே, சீனத் தற்காப்புக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத் தரத் தொடங் கினார்.
ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் லீயின் ‘ஜீட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்லீ. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழடையும்’’ என்று உறுதியுடன் சொன்னார் லீ.
1971ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலகெங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியான ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூலில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ நடந்துகொண்டு இருந்தபோது, மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ்லீ. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்துவிட்டன’’ என்று டாக்டர்கள் சொன்னாலும், 33வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்று வரை விடுபடவே இல்லை.
வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றும் வெற்றியைத் தொடவே முடியாது; வாய்ப்புகளை உருவாக்குபவர்களே சாதனையாளர்கள் என்பது புரூஸ்லீயின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்!
எஸ்.கே. முருகன்- விகடன்
*
புரூஸ்லீயின் திரைப்படம் (தமிழாக்கம்) விஜய் டிவியில் இந்திய நேரம் இரவு 10.30க்கு ஆரம்பித்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
17:20 Posted in சினிமா | Permalink | Comments (1) | Email this | Tags: Bruce Lee, Kung Fu, குங்பூ, புரூஸ் லீ, புரூஸ்லீ
Sunday, 22 June 2008
❒ நான் கடவுள் துளிகள்
உயிரை முடுக்கும் இசையில், உச்ச ஸ்தாயியில் மந்திர உச்சாடனைகள் முழங்க, ''ஹரஹரஹர மஹாதேவ்!'' என கங்கை நதிக் கரை கண் முன்னே விரிகிறது. ஆயிரமாயிரம் சாமியார்களுக்கு நடுவே 'ருத்ரன்' ஆர்யா, ருத்ர தாண்டவமாடும் காட்சி, உலக சினிமாவுக்கே புதுசு!
''காசியில, கங்கை நதிக் கரையில ஒரு வாரம் திரிஞ்சா, வாழ்க்கை பற்றிய புரிதலே புதுசாகிடும் கிறது உண்மைதான்!'' 'நான் கடவுள்' படப்பிடிப்பை முழுமையாக முடித்து சென்னை திரும்பி இருக்கிற இயக்குநர் பாலா சின்னதாகப் புன்னகைக்கிறார். ''பிரசவ வேதனையை விடப் பெரிய அவஸ்தை, தன் படைப் பைப் பற்றித் தானே பெருமை பேசுவது'' என்று பேட்டிக்கு மறுத்தவரிடம், பிடிவாதம் பிடித்துப் பேசியதில் கொஞ்சம்...
யார் கடவுள்?
இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!
ரெண்டரை அடி உயரமே இருக்கிற என் பரமசிவனுக்கு 54 வயசு. அதுக்கும் கம்மியா இருக் கிற என் 30 வயசு பார் வதி, இதயக் கோளாறு உள்ள குழந்தை. உடம்பு போலவே, மனசும் இன்னும் குழந்தையாவே இருக்கு. இப்படி இன்னும் ரெண்டு டஜன் மனிதர்களை இதில் நடிக்க வெச்சிருக்கேன். பொறந்ததில் இருந்து இன்னும் வீட்டு வாசலைத் தாண்ட முடியாத கடவுளின் குழந்தைகளை, ஊர் உலகம் எல்லாம் பார்க்கட்டும்னு கூட்டிட்டு வந்திருக்கேன். மேனி அழகைச் சிவப்பாக்க சிவப்பு க்ரீம் பூசுகிற உலகமே, வந்து பாருங்கடா இவங்களையும்னு காட்ட வந்திருக்கேன்.
ஊனத்தோடு பொறக்கிறது சாபம் இல்லை; சத்துக் குறைச்சல். சரி, நல்ல சாப்பாடு நாலு வேளை சாப்பிட்டிருந்தா, ஊட்டச் சத் தோடு இருக்கலாம். ஒருவேளைச் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஆத்தாளுக்குப் பொறந்தா, ஓரமாக் குழி தோண்டிப் பொதைச்சிரலாமா? உடம்பு, மனசு, மூளைன்னு எல்லாமே சிதைஞ்சிருக்கிற அந்த உயிர்களின் சிரிப்பே, இந்தப் பிரபஞ்சத்துக் கான ஆன்மிகம்!''
'ஒருமுறையா இருமுறையா பலமுறை
பல பிறப்பெடுக்கவைத்தாய்
புதுவினையா பழவினையா
கணம்கணம் தினம் எனைத்
துடிக்கவைத்தாய்
பிண்டம் என்னும் எலும்பொடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
ஐயனே... எம் ஐயனே!' ராஜாவின் பாடல் மனசை அறுக்கிறது.
''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?
பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!
நரகலைத் திங்கிற நாய் மாதிரி ஒரு ஈனப் பொழப்பு. ஆனா, அந்த எளிய மனிதர்களிடம் இருக்கிற பண்பு, படிச்ச பல பெரிய மனுஷங் களிடம்கூட இல்லை என்பது நான் உணர்ந்த உண்மை!''
''ஆர்யாவின் தோற்றமும் பூஜாவின் மாற்றமும் பற்றிப் பேசலாமா?''
ஆங்... ருத்ரனா வர்றான் ஆர்யா. அவனை ஒரு ஜாலியான பையனா தான் பார்த்திருக்கு தமிழ் சினிமா. இதுல ஆர்யா, அவன் சினிமா வாழ்க்கையில அடுத்த கட்டத் துக்கு வந்துட்டான். உன்னதம், உன்மத்தம்னெல்லாம் சொல்வாங்கல்ல... அப்படி ஒரு உழைப்பு. ரெண்டு வருஷத்தில் வேற ஒரு ஆளா உருமாத்திட்டேன். க்ளைமாக்ஸ் ஃபைட் ஒண்ணை ஒரு முழு மாசமும் எடுத்தேன். ரெண்டே பேரு... காத்துல கை வீசுறதெல்லாம் கிடையாது. அடி ஒவ்வொண்ணும் நிஜமாவே விழும். மூஞ்சி முகரைஎல்லாம் பொளந்து, முட்டி பேந்துன்னு இதுவரைக்கும் சினிமா பார்த்திராத ஆக்ஷன்!
அம்சவல்லியா வருது பூஜா. சின்சியரான பொண்ணு! சிரிச்ச முகமாவே மொத்தப் படமும் முடிச்சுக் கொடுத்துச்சு. கடைசி வரைக்கும் தன் கஷ் டங்கள் எதையுமே காட்டிக்கலை. வலியும் ஜீவனுமான ஒரு கேரக்டரை, அப்படி ஒரு எனர்ஜியோடு செய்திருக்கு. தான் சினிமாவில் இருந்தேன்னு பெருமிதமா சொல்லிக்கிறதுக்கு, அதோட ஆயுசுக்கும் இந்த ஒரு படம் போதும்!
ஆர்யா, பூஜா போல என் கனவு மொத்தத்தையும் தன் கண்களில் சுமந்தவர் கேமராமேன் ஆர்தர் வில்சன். காசியில், ராஜாவின் பாடல் நாகராவில் ஓடியபோது, வந்து உட்கார்ந்த ஒரு வடநாட்டுச் சாமியார்... அந்த ஏழரை நிமிஷங்களும் வானம் வெறித்து, அருவி போலக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். பாடல் முடிந்ததும், என் தலை தொட்டு, 'இதோட அர்த்தம் எனக்குப் புரியும்' என்று சொல்லிட்டுப் போனார். மொழி தெரியாத உலகத்தையும் விழி கசியவிடுகிற ராஜா என்னோடு இருக்கார். அது போதும் எனக்கு!
''15 வருடங்கள்... மூன்றே படங்கள். நாலாவது படமான 'நான் கடவுள்' உருவாக்கத்திலும் இவ்வளவு காலம் எடுத்துக்கறீங்களே, உங்க ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலே இதுதானா?''
''தீபாவளி, பொங்கல்னு படம் ரிலீஸ் பண்ண நான் பட்டாசோ, கரும்போ இல்லை. எந்த விஷயத்தை எடுத்துக்கணும், அதை எப்படிச் செய்து முடிக் கணும்னு எனக்குத் தெளிவு கிடைக்காம, அதை நான் செய்ய மாட்டேன். இருநூறு லாரி, முன்னூறு கார்களைவெச்சு சேஸிங் படம் எடுக்கிற பரவ சத்தை, படபடப்பைவிட, ரெண்டு மனிதர்களைத் திண்ணை யில உட்காந்து பேசவெச்சே பிரமாதப்படுத்திட முடியும்னு நினைக்கிறேன். அது நான் நினைச்சவிதத்தில் கிடைக்கும் வரை, அந்த ரெண்டு பேரையும் திண்ணையைவிட்டு எழுந்திருக்க விட மாட்டேன். அவ்வளவுதான் விஷயம்!
இதோ, 'நான் கடவுள்' படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப் பரைக் கொடுத்து, 'பேசுப்பா!'னு படம்பிடிக்க முடியாது. அவங்க ளோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும் பம்.
இன்னொரு பக்கம் காசி சாமி யார்கள். அகோரின்னு சொல்லப் படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன். இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தி யாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!''
''சரி, கடவுளை எப்போ கண்ணுல காட்டுவீங்க?''
''கூடிய விரைவில்னு பொது வான வார்த்தைகளில் பொய் சொல்ல விரும்பலை. விஷயம் என்னன்னா, வித்தை பழகின அளவுக்கு நான் வியாபாரம் பழகலை. ஒரு வியாபாரி போலப் பேரம் பேசவும் எனக்குத் தெரியாது. இந்தப் படத்துக்கான செலவு, நினைச்சதைவிட, அதிகமாகிப் போச்சு! அத்தனையும் தவிர்க்க முடியாத செலவு. என் தரப்பில் இருந்து சில கோடிகளை வாங்கிப் போட்டு, படத்தை முடிச்சிருக்கேன்.
'ஹே ஜென்ம மாத்ரம் நா
ஹிதா அபி ஜென்ம நபவிஷ்யதி'னு சொல்வான் என் ருத்ரன். அப்படி ஒரு விடுதலையை வேண்டிக்கிற அளவுக்கு, இந்தப் படத்தை உருவாக்குவதில் உழைச் சிருக்கோம். இயல்பின் ஆழத்தையும் அதன் அர்த்தத்தையும் பிடித்துவிட்டேன் என்பதுதான் என் பெருமிதம்!''
#விகடனில் பாலா பேட்டி
*
அஜித் நடிக்க இருந்த படம் பாலாவுடன் மோதல் ஏற்பட்டு அவர் விலக ஆர்யா நாயகனானார்.
நாயகிக்கு பாவனா, கார்த்திகா என்றெல்லாம் பேசப்பட்டு பூஜாவில் முடிந்திருக்கிறது.
இரண்டு வருடங்களாக தாடி முடியுடன் ஆர்யா வேறு படங்களில் நடிக்க முடியாமல் சிக்கிக் கொண்டார்.
காசி நிர்வாணச் சாமியார்களும் அரவாணி ஒருவரும் உட்பட வித்தியாசமான பலரை இதில் நடிக்க வைத்துள்ளார் பாலா.
ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
இளையராஜா இசையமைக்கிறார்.
சண்டைப்பயிற்சி : ஸ்டன்ட் சிவா.
ஒளிப்பதிவு : ஆர்தர் வில்சன்.
காசியில் தொடங்கி தேனியில் முடிந்துள்ளது..
கிளைமேக்சில் நரமாமிசம் தின்னும் காட்சி இடம் பெறுவதாக செய்(வதந்)தி(?).
தயாரிப்பு சிவஸ்ரீ சீனிவாசன், தேனப்பன் தொடங்கி தற்போது பிரமிட் சாய்மீரா பொறுப்பேற்றுள்ளது.
06:40 Posted in சினிமா | Permalink | Comments (6) | Email this | Tags: பாலா, ஆர்யா, சினிமா


